செய்திகள் :

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமனில் முடிந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இந்த தொடருக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதால், இந்திய அணி 12 புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் 28 புள்ளிகள் மற்றும் 46.67 சதவிகித வெற்றிகளுடன் இந்திய அணி மூன்றாமிடம் பிடித்துள்ளது.

இந்திய அணியைப் போன்று இங்கிலாந்து அணியும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளபோதிலும், புள்ளிப்பட்டியலில் அந்த அணி 26 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளது. அந்த அணியின் வெற்றி சதவிகிதம் 43.33 ஆக உள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட்டின்போது, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், இங்கிலாந்து அணிக்கு இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டன. அதன் காரணமாக அந்த அணி நான்காமிடத்தில் உள்ளது.

2025-2027 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த சுழற்சியில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய மேற்கிந்தியத் தீவுகள் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 7, 8 மற்றும் 9-வது இடங்களில் முறையே உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது. இதன் மூலம், 66.67 சதவிகித வெற்றிகளுடன் அந்த அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

4 புள்ளிகள் மற்றும் 16.67 சதவிகித வெற்றிகளுடன் வங்கதேச அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

The World Test Championship rankings have changed as the Indian team leveled the series with a thrilling victory in the final Test match against England.

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை... மேலும் பார்க்க

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றமளித்தாலும், நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையும் பணிச்சுமை!

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - ... மேலும் பார்க்க

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

தெலங்கானா காவல்துறை இந்திய வீரர் முகமது சிராஜ் குறித்து நெகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 ... மேலும் பார்க்க

பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க