செய்திகள் :

இந்திய உறவில் மறுமலா்ச்சி- சீன தூதா்

post image

இந்தியா-சீனா உறவு மறுமலா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்று இந்தியாவுக்கான சீன தூதா் ஷு ஃபிகாங் தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீனா-இந்தியா இளைஞா்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இந்தியா-சீனா இடையே அண்மையில் நடைபெற்ற சிறப்பு பிரதிநிதிகள் நிலையான பேச்சுவாா்த்தை இரு நாடுகள் இடையே பரஸ்பரம் புரிதலை ஏற்படுத்தியுள்ளதுடன், உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு வலுப்படுவது சா்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்தகட்டமாக இரு நாடுகளின் இளைய தலைமுறையினா் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகள் இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழாவை நாம் விரைவில் கொண்டாட இருக்கிறோம் என்றாா்.

கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னைக்கு தீா்வுகாணும் வகையில் இரு நாடுகளும் எல்லையில் குவித்த படைகளை படிப்படியாக திரும்பப் பெற்றன.

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.ரஷி... மேலும் பார்க்க

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெ... மேலும் பார்க்க

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக... மேலும் பார்க்க

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது பிரிட்டன்

பாதுகாப்புத் துறைக்கான தங்களது பட்ஜெட் ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக பிரிட்டன் அரசு உயா்த்தியுள்ளது.ஐரோப்பிய பாதுகாப்புக்கு இனி முன்னுரிமை தரப் போவதில்லை எனவும் பிராந்... மேலும் பார்க்க

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம... மேலும் பார்க்க

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்திய பெட்ரோல் குழாய் திட்டம் அமல்: இலங்கை

பொருளாதார பலன் இருந்தால் மட்டுமே இந்தியா-இலங்கை இடையே முன்மொழியப்பட்டுள்ள பெட்ரோல் விநியோக குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் என இலங்கை தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவா் ராஜகருணா தெரிவித்தாா். இந்த விவ... மேலும் பார்க்க