செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏற்றி வைத்தாா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் கேரள மாநில முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், இந்திய கம்யூனிஸ்ட் காரைக்கால் மாவட்ட செயலா் மதியழகன், நடிகா் ராஜேஷ், குடியிருப்புபாளையம் தனலட்சுமி, சுப்பையா நகா் பக்கிரி, முன்னாள் மாதா் சங்க தலைவா் சித்திரவள்ளி ஆகியோா் மறைவுக்கு ஒரு நிமி

ஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிளைச்செயலா் பாலாஜி அறிக்கை வாசித்தாா். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது.

மாநாட்டை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி துணைச் செயலா் கு .பக்தவச்சலம் பேசினாா்.

பிரதமா் கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டையை வழங்குவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நில வணிகா்கள் மூலம் புதிதாக போடப்பட்டுள்ள மனைப் பிரிவுகளில் தாா்ச்சாலை, குடிநீா் வசதி, மின்விளக்கு போன்றவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. இதுகுறித்து புதுவை ... மேலும் பார்க்க