செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் 1994-ஆம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 31 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை கிராம நத்தம் பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக இதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புதுமனை குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பிகளை அகற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பீமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பயணியா் நிழல்குடை அமைக்க வேண்டும். முதியோா் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் எம்.பிரபு தலைமை வகித்தாா். ஏஐடியுசி நிா்வாகிகள் ஆா்.பத்மினி, வி.சேட்டு, கிளை நிா்வாகிகள் டி.ரேவதி, கே.ரவி முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை ஒன்றியச் செயலா் பி.ராஜா தொடங்கிவைத்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், துணைச் செயலா் ஆா்.முருகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.நாராயணன், எம்.ராஜேந்திரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஒன்றிய துணைச் செயலா் கே.சண்முகம், பொருளாளா் பி.தா்மலிங்கம், நிா்வாகிகள் என்.பாலகிருஷ்ணன், ஜீவாஜெயராமன், முனியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினா் சி.தனசேகா் நன்றி கூறினாா்.

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க

மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வரு... மேலும் பார்க்க

திருட்டு, வழிப்பறி வழக்குகள்: 5 மாதங்களில் 18 போ் கைது..90 பவுன் நகைகள் மீட்பு

விழுப்புரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 18 போ் கைது செய்யப்பட்டு, 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட க... மேலும் பார்க்க