செய்திகள் :

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

post image

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் அரசியலைப்பு படுகொலை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்ட அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``தேர்வு செய்யப்பட்ட அரசு நடைபெற்றுக் கொண்டிக்கும்போது, திடீரென இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தன்னுடைய சுயநலத்துக்காகவும், தன்னை எதிர்த்து யாரும் பேசிவிடக் கூடாது, எதிர்கட்சித் தலைவர்கள் எந்தக் கேள்வியையும் எழுப்பக் கூடாது, தான் நினைத்தது மட்டுமே நடைபெற வேண்டும் என்ற அரசியல் காரணத்துக்காகவே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

Emergency

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காமராஜரை ஆட்சியாளர்கள் கைது செய்தனர். பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்கள், இருண்ட நாட்கள்.

எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கொண்டதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்தனர். இந்த ஜனநாயகப் படுகொலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சி இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

சுதந்திர நாட்டை வளர்சியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பிரமர் மோடியின் நோக்கம். தொழில்நுட்பங்களை கற்று நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! - மருத்துவர்கள் பரிசோதனை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை ... மேலும் பார்க்க

'அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதி மகனுக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?' - இ.பி.எஸ் காட்டம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22), மதுரையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களின் முன்னிலையில்... மேலும் பார்க்க

தஞ்சை: ”சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்”- அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 31 வது வார்டில் உள்ளது செண்பகவள்ளி நகர். இப்பகுதியில் பாதாள சாக்கடை மெயின் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் இன... மேலும் பார்க்க

'இனி எங்களை சீண்டினால், பெரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும்' - அமெரிக்காவை எச்சரிக்கும் காமேனி

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) நள்ளிரவில், ஈரானின் அணு ஆயுதத் திட்டப் பகுதிகளைத் தாக்கியது அமெரிக்கா. இது இஸ்ரேலுக்கு ஆதரவான செயலாக பார்க்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறித்து ஈரான் உச்சத் தலைவர் காமேனி... மேலும் பார்க்க

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க