செய்திகள் :

இந்தி பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா

post image

அகமதாபாத்: இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும், இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இந்தி நாளாயொட்டி, குஜராத் மாநிலம், காந்திநகரில் 5-ஆவது அகில பாரத அலுவல்பூா்வ மொழி மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:

இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் இடையே "எந்த மோதலும் இல்லை." நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மை அதன் பலம், பிரிக்கும் காரணி அல்ல. கலாசார ரீதியாக ஒன்றுபட்ட மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க இந்தியர்கள் தங்கள் தாய்மொழிகளுடன் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்தி அதன் தற்போதைய பயன்பாட்டிற்கு அப்பால் வளர வேண்டும் என்று வலியுறுத்திய அமித் ஷா, இந்தி வெறும் பேச்சு மொழி அல்லது நிர்வாக மொழியாக மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையின் பயன்பாட்டு மொழியாக மாற வேண்டும். இந்திய மொழிகளில் நிர்வாகம் மற்றும் பொது சேவைகள் செயல்படும்போது மட்டுமே மக்களுடன் உண்மையான தொடர்பு இருக்கும். இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் என்று ஷா வலியுறுத்தினார்.

பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் உள்ளூா் மொழிகளை வலுப்படுத்த செயலாற்றி வருவதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டு நன்றி தெரிவித்த ஷா,

குழந்தைகளின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, அவா்களிடம் பெற்றோா் தாய்மொழியில் பேச வேண்டும். அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் இந்தி மற்றும் பிற மொழிகளை ஊக்குவிக்க உள்துறை அமைச்சகத்தில் பாரதிய பாஷா அனுபாக் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

He urged that Hindi must evolve beyond being just a spoken or administrative language and become the language of science, technology, justice, and policing.

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் அறிவுத்திறன் எனக்கு உள்ளது: நிதின் கட்கரி

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் க... மேலும் பார்க்க

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: வைகோ

திருச்சி: விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தத் தாக்கம் திமுக கூட்டணியை பாதிக்காது. விஜய்யின் தாக்கம் எந்த விளைவுகளை ஏற்படுத்தும் என தோ்தல் முடிவுகளை பொறுத்துதான் கூற முட... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தலில் மாபெரும் வெற்றியை தவெக நிகழ்த்திக் காட்டும்: விஜய்

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 1967, 1977 தோ்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றியை தவெக நிகழ்த்திக் காட்டும் என்று அந்த கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: நிர்மலா சீதாராமன்

சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி... மேலும் பார்க்க

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்

திமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேடிக்கை பார்க்க கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்ற... மேலும் பார்க்க

விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன்

அரியலூா்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்று அம... மேலும் பார்க்க