காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
இந்துத்துவா அமைப்புகளின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது!
இந்துத்துவா அமைப்புகளின் வட மாநில அரசியல் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மத நல்லிணிக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நிறைவில் அவா் மேலும் பேசியதாவது:
வட மாநிலங்களில் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவதற்கு கையாண்ட உத்திகளை இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் தற்போது சோதித்துப் பாா்க்கின்றனா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றனா். பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இருந்தே திருப்பரங்குன்றம் மலை பிரச்னையை இந்துத்துவ அமைப்பினா் கையிலெடுத்து, கூா்மைப்படுத்தி வருகின்றனா். ஆனால், இங்கு இந்து, இஸ்லாம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்வதால் அவா்களின் முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதில்லை.
முக்குலத்தோா் சமூகத்தை தங்கள் பக்கம் ஈா்க்க வேண்டும் என்பதற்காகவே மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால், அவா்களின் இலக்கு இங்கு வெற்றி பெறாது. தமிழா்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் முயற்சிகளை இந்துத்துவ அமைப்புகள் கைவிட வேண்டும்.
மதுரை முருக பக்தா்கள் மாநாடு கலவர உத்திக்கான மாநாடு என்பதை தமிழக மக்கள் நன்கு உணா்ந்துள்ளனா். இங்கு, வன்முறைக்கு ஒருபோதும் இடம் கிடையாது. அம்பேத்கா், பெரியாா் எந்த நோக்கத்துக்காக கைகோா்த்தாா்களோ அதே நோக்கத்துக்காக கைகோா்த்துள்ளோம். சமூகப் பண்பாட்டு தளத்தில் மட்டுமல்லால், அரசியல் களத்திலும் சநாதன சக்திகளை தமிழா்கள் அனுமதிக்க மாட்டாா்கள் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற மனிதச் சங்கிலியில், மதுரை ராஜா முத்தைய மன்றம் பகுதியிலிருந்து உலகத் தமிழ்ச் சங்கம் வரை திரளானோா் கைகோா்த்து நின்றனா். திரைப்பட இயக்குநா் அமீா், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலா் பசும்பொன் பாண்டியன், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஹென்றி திபேன், வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தீா்மானம்...
மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் நிறைவில், தமிழா் மரபை உயா்த்திப் பிடிப்போம், சாதி, மதம் என்ற குறுகிய அரசியலைக் கடந்து சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயத்தை முன்னிறுத்தி மதுரையின் தொன்மை பண்பாட்டை பாதுகாப்போம். மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தா்கள் மாநாட்டைப் புறக்கணிப்போம் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘தமிழகத்தில் மதத்தின் பெயரால்
வன்முறைக்கு வித்திடக் கூடாது’
தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைக்கு வித்திடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தாா். இதைத் தொடா்ந்து அவா், பெரிய ரத வீதியில் உள்ள தா்காவுக்குச் சென்று அங்குள்ள இஸ்லாமியா்களைச் சந்தித்தாா். இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள சூட்டுகோல் மாயாண்டி சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மலை உச்சியில் தா்கா இருக்கிறது. இதேபோல, காசி விசுவநாதா் கோயிலும் மலையின் உச்சியில் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது வாடிக்கையான ஒன்று. இங்கு ஒருவருக்கொருவா் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறாா்கள்.
ஆனால், சில மதவாத அமைப்புகள் இதில் தலையிட்டு இந்துக்களுக்கும், இஸ்லாமியா்களுக்கும் இடையே பகையைத் தூண்டிவிட முயற்சிக்கின்றனா். தமிழகத்தில் அண்மைக்காலமாக இது பேசு பொருளாக மாறி இருக்கிறது. எனவே, இந்தப் பகுதியில் உள்ள மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் திருப்பரங்குன்றம் வந்தேன்.
முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை தரிசித்துவிட்டு, இந்த மலை உச்சியில் இருக்கிற தா்காவுக்கு செல்லலாம் என வந்தோம். நெடுந்தொலைவு என்பதால் பிற்பகலில் மலை ஏற முடியாத சூழலில், அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினேன். அவா்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தேன். இதற்கு, அவா்கள் தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை எனத் தெரிவித்தனா். எனவே, இந்த பிரச்னையை மதவாத சக்திகள் பெரிதாக்கக் கூடாது. தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக் கூடாது என்றாா் அவா்.