செய்திகள் :

`இனி வேட்புமனு தாக்கலும் ஆன்லைனில் செய்ய முடியும்' - எப்படி தெரியுமா?

post image

வேட்புமனு தாக்கல் - உள்ளாட்சி தேர்தல் தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களுக்கு பிள்ளையார் சுழி இது தான்.

வேட்புமனு தாக்கலே நம் நாட்டில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.

இதெல்லாம் இல்லாமல், இனி சைலென்டாக சில கிளிக்குகளிலேயே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட போகிறது.

ஆம்... இனி வேட்புமனு தாக்கலும் ஆன்லைனிற்கு மாற போகிறது.

முதலில் பீகார்; பிறகு...

இந்த ஆண்டின் கடைசியில் நடக்க உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்த நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அது வெற்றிகரமாக இருந்தால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

தேர்தல்
தேர்தல்

என்ன இணையதளம்?

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட உள்ள இணையதளம் suvidha.eci.gov.in.

இந்த இணையதளத்தில் வேட்பாளர்கள் தங்களது மொபைல் எண்ணை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

பின், அதில் கேட்கப்படும் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்தால், வேட்பாளரை பற்றிய அடிப்படை தகவல்கள் தானாக வந்துவிடும்.

பின்னர், போட்டியிடப் போகும் தொகுதியை தேர்வு செய்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த இணையதளத்திலேயே சொத்து, வழக்கு போன்ற அனைத்து விவரங்களை அபிடவிட்டாகவும், தேவையான ஆவணங்களையும் அப்லோட் செய்து பதிந்துகொள்ளலாம்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இது மட்டுமல்ல...

இந்த இணையதளத்தில் பிரசாரங்களுக்கான அனுமதி, பாதுகாப்பு கோரிக்கைகள், வரவு செலவு கணக்கு போன்றவற்றையும் தாக்கல் செய்யலாம்.

'பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளது. இரண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக வரும்போது, பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை இந்த இணையதளம் தடுக்கும்' என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ECI முறைகேடு: `எங்களிடம் ஆதாரமிருக்கிறது' - Rahul Gandhi | Kamal DMK BJP | Imperfect Show 25.7.2025

* இந்திராவை முந்திய மோடி? * பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்! * இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம் கையெழுத்து?* “இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வ... மேலும் பார்க்க

'ராமதாஸ் கொடுத்த புகார்; அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!' - முழு விவரம்!

'அன்புமணி நடைபயணம்..'பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸின் 'உரிமை மீட்க தலைமுறை காக்க...' என்கிற 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். அன்புமணிபாமக நிறுவனர் ராமதாஸ... மேலும் பார்க்க

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க