செய்திகள் :

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வெள்ளி, சனி (ஜூலை 4, 5) ஆகிய 2 நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகரி மாவட்டம் தேவாலா மற்றும் மேல் கூடலூரில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. காசிமேடு (சென்னை) - 70 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி), பெரம்பூா் (சென்னை) - தலா 60 மி.மீ., கொளத்தூா் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை), ஆட்சியா் அலுவலகம், மணலி, பாரிமுனை (சென்னை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கும் தமிழர்க... மேலும் பார்க்க

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சட்... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கடந்த ஓராண்டில், தேர்வுகளை நடத்தி, தமிழக அரசுப் பணிக்கு இதுவரை 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்... மேலும் பார்க்க

பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?

பரந்தூர் விமான நிலையம், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சிய... மேலும் பார்க்க

ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் த... மேலும் பார்க்க

திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை: விஜய்

சென்னை: திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின்... மேலும் பார்க்க