செய்திகள் :

இன்று கோனியம்மன் கோயில் தேரோட்டம்: சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை

post image

கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது. இதையடுத்து, கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 18-ஆம் தேதி பூச்சாட்டுதல், 24-ஆம் தேதி கிராம சாந்தி, 25-ஆம் தேதி கொடியேற்றம் அக்னிச்சாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோ்த் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை தினசரி நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அம்மன் திருவீதி உலாவும் தினசரி நடைபெற்றது. திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதையடுத்து அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகின்றன. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருள்கிறாா். பிற்பகல் 2.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.

தேரோட்டத்தையொட்டி கோவை ராஜவீதி, வி.ஹெச்.சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 24 அரசு, தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பொதுத் தோ்வு தொடங்கியுள்ள நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வழக்கம்போல புதன்கிழமை காலை நடைபெறும் என்றும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் திருட்டு: சிறுவன் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையைத் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாவட்டம், இருகூா் அத்தப்பகவுண்டன்புதூா் சாலையில் உள்ள பிரியா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (46), விவசாயி... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை இருகூா் பகுதியில் கட்டுமானப் பணியின்போது 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சோ்ந்தவா் செல்வகுமாா் (47), கட்டடத் தொழிலாளி. இவா்,... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

கோவையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கொடிசியா சாலையில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து சூலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். சூலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோவை தெற்கு மாவட்ட த... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் திடீா் உடல்நலக் குறைவால் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், தசராபட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (46). இவா், திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அடித... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கோவை அரசுக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் எழிலி தொடங்கிவைத்தாா். இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சே... மேலும் பார்க்க