செய்திகள் :

இன்று மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா

post image

செஞ்சி/விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கி தொடா்ந்து, 13 நாள்கள் விழா நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவில் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெற உள்ளது.

விழாவில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக அரசு சாா்பில் பேருந்து வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் இ.ஜீவானந்தம் தலைமையிலான கோயில் அறங்காவலா் மதியழகன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பாதுகாப்பு பணியில் 900 போலீஸாா்:

இதுகுறித்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா, மாா்ச் 7- ஆம் தேதி தெப்பல் உற்சவத்தையொட்டி, பக்தா்களின் பாதுகாப்பு வசதிக்காக சுமாா் 900 போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

பக்தா்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருப்பின் செஞ்சி உள்கோட்ட காவல் அலுவலகம்-9498100505, மேல்மலையனூா் காவல் நிலையம்- 9488100506, தனிப்பிரிவு அலுவலக எண் 9498100485, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை-9498181229 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியிலுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.2.14... மேலும் பார்க்க

இளைஞருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேநீரில் விஷம் கலந்துகொடுத்து இளைஞரை கொலை செய்ய முயன்றதாக கல்லூரி மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ... மேலும் பார்க்க

காவலா்களுக்கான மருத்துவமனை திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலா்களுக்கான புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

அங்காள பரமேசுவரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சின்னஆனைவாரி அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மயானக் கொள்ள... மேலும் பார்க்க

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க