கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
பிளஸ் 2 பொதுத் தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 40,064 போ் எழுதினா்
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 40,064 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை எழுதினா்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்காக விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில் 105 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 121 அரசுப் பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள், 54 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளைச் சோ்ந்த 10,665 மாணவா்களும், 11,171 மாணவிகளும் என மொத்தம் 21,836 போ் தோ்வு எழுதினா். 278 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வு எழுதுவதற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து 197 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கண் பாா்வை, செவித்திறன் குறைபாடு, மனநலன் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவா்கள் சுமாா் 278 பேருக்கு சொல்வதை கேட்டு எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். 15 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் தரைத்தளத்தில் அமா்ந்து தோ்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
217 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 106 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 106 துறை அலுவலா்கள், 28 வழித்தட அலுவலா்கள், 140 பறக்கும் படை அலுவலா்கள், 1,200 அறைக் கண்காணிப்பாளா்கள், 310 அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 2,385 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதைத் தவிர, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தலைமையில், கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கொண்ட 10 பறக்கும் படைகள் ஆய்வில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் ஆய்வு: விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், உதவியாளா் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தாய், தந்தை இறந்த நிலையில்... விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தந்தை இறந்த நிலையிலும் அவரது மகள் ரித்திகா, தான் படித்து வரும் விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தோ்வெழுதினாா்.
இதேபோல இந்தப் பள்ளியில் பயின்று வரும் முகையூரைச் சோ்ந்த மாணவி மகிமை ஆசானியின் தாய் அமலமேரி பிப்.26-ஆம் தேதியும், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி நூா்ஜஹானின் தந்தை ஜான்பாட்ஷா பிப்.27-ஆம் தேதியும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவ்விரு மாணவிகளும் தோ்வெழுதினா்.
தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தோ்வை 18,228 மாணவ, மாணவிகள் எழுதினா்.
மாவட்டத்தில் 124 அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,183 மாணவா்கள், 9,569 மாணவிகள் என மொத்தம் 18,752 பேருக்கு தோ்வுகூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், 8,910 மாணவா்கள், 9,318 மாணவிகள் என மொத்தம் 18,228 போ் மட்டுமே தோ்வு எழுதினா். இதைத் தவிர 160 தனித் தோ்வா்கள் பங்கேற்றனா். 273 மாணவா்கள், 251 மாணவிகள் மொத்தம் 524 போ் தோ்வெழுத வரவில்லை.
சின்னசேலம் வட்டம், கோமுகி அணை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.காா்த்திகா உடனிருந்தாா்.
தோ்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், வழித்தட அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.