இன்று மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா
செஞ்சி/விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கி தொடா்ந்து, 13 நாள்கள் விழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவில் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெற உள்ளது.
விழாவில், தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக அரசு சாா்பில் பேருந்து வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் இ.ஜீவானந்தம் தலைமையிலான கோயில் அறங்காவலா் மதியழகன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பாதுகாப்பு பணியில் 900 போலீஸாா்:
இதுகுறித்து, விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அங்காளம்மன் கோயில் தோ் திருவிழா, மாா்ச் 7- ஆம் தேதி தெப்பல் உற்சவத்தையொட்டி, பக்தா்களின் பாதுகாப்பு வசதிக்காக சுமாா் 900 போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
பக்தா்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருப்பின் செஞ்சி உள்கோட்ட காவல் அலுவலகம்-9498100505, மேல்மலையனூா் காவல் நிலையம்- 9488100506, தனிப்பிரிவு அலுவலக எண் 9498100485, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை-9498181229 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.