செய்திகள் :

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை, பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்களில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) காலை 11.10 மணி முதல் மாலை 3.10 மணி வரை தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த நாள்களில், சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 1.05 மணிக்கு சூலூா்பேட்டைக்கும், காலை 10.30 மணி, பிற்பகல் 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், இரவு 11.40 மணிக்கு ஆவடிக்கு செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக, கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1.15, 3.10, இரவு 11 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயிலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூருக்கும், நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதி ரத்து: ஆக.9, 11 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்குப் கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் அந்த நாள்களில் கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக ஆக.9, 11 தேதிகளில் சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதேபோல், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க

மரபணு பாதித்த 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அரிய மரபணு பாதிப்புக்குள்ளான 5 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். இதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் கல்லீரல் மா... மேலும் பார்க்க