செய்திகள் :

``இப்போதைக்கு வாக்காளர் அடையாளம்தான் குறி அதைத் தொடர்ந்து..!"- ராகுல் பேச்சு

post image

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, போலியான வாக்காளர்களைப் புகுத்துவதற்கான 'பெரிய சதி'யின் ஒரு பகுதி எனத் தெரிவித்திருக்கிறார்.

அவரது 'பாரத் வாக்காளர் அதிகார் யாத்திரை'-யின் பன்னிரண்டாவது நாளன நேற்று பீகார் மாநிலத்தின் சீதாமர்ஹி பகுதியில் உரையாற்றிய ராகுல் காந்தி, ``பா.ஜ.க தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களை குறிவைத்து நீக்கி வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதே நேரத்தில் பணக்காரர்களின் பெயர்களை நீக்கவில்லை. இது ஒரு விபத்து அல்ல. இது ஒரு திட்டம். வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால், அனைத்தும் பறிபோய்விடும். முதலில் அவர்கள் உங்கள் வாக்கை எடுத்துக்கொள்வார்கள், பின்னர் உங்கள் ரேஷன் கார்டை எடுத்துக்கொள்வார்கள்.

பின்னர் உங்கள் நிலத்தை - இறுதியாக, உங்கள் அனைத்து உரிமைகளையும் எடுத்துக்கொள்வார்கள். கர்நாடகாவில் மகாதேவபுராவில் அவர்கள் வாக்குகளை திருடியதை நாங்கள் கண்டுபிடித்தோம். பீகார் அவர்களின் அடுத்த விளையாட்டு மைதானமாக இருக்காது.

தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்காளர் அதிகார் யாத்திரை, இந்திய கூட்டணியின் ஆதரவுடன் வெறும் ஒரு அடையாள பிரசாரம் மட்டுமல்ல. உரிமை காப்பு போராட்டம். வாக்காளர் ஒடுக்குமுறை பொறுத்துக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் பா.ஜ.க-விற்கும் தெரிவித்துக்கொள்கிறோம்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...'- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜ... மேலும் பார்க்க

"அடுத்தது ஹைட்ரஜன் குண்டு; மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்றும், அது தொடர்பான அணுகுண்டை வீசப்போகிறேன் என்றும் முன்பு தெரிவி... மேலும் பார்க்க

TNPSC: "அய்யா வைகுண்டர் பற்றிய கேள்வியே தவறானது; இதயத்தை நொறுக்கும் செயல்" - அய்யா வழியினர் வேதனை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. அதில், பின்வரும் வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வுசெய்க என கேட்கப்பட்ட கேள்... மேலும் பார்க்க

டீ, காபி விலை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வரை - செப்டம்பரில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று முதல் (செப்டம்பர், 2025) இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒரு சில நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பதை பார்க்கலாம்.1. வருமான வரிக் கணக்குத் தாக்கல்: வருகிற 15-ம் தேதியோடு, வருமான வரிக் கணக்கு... மேலும் பார்க்க

7.8% வளர்ந்த இந்தியாவின் GDP; இது தொடருமா? - இப்போதாவது மத்திய அரசு GST-ஐ குறைக்கிறதே! | Explained

கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2025-26 நிதியாண்டில், முதல் காலாண்டின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் 7.8 சதவிகிதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

"விஜய்யுடன் கூட்டணியா... எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அதிமுக ஒன்றிணைய வேண்டும்" - ஓ.பி.எஸ்

'அதிமுக'வில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கிடையேயான அதிகாரப்போட்டி முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகல... மேலும் பார்க்க