செய்திகள் :

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

post image

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

தல்வாரா கிராமத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1ஆம் தேதி நேரிட்ட பயங்கர வெள்ளத்தின்போது, தனது பெற்றோர் மற்றும் பாட்டியை இழந்த இந்தக் குழந்தை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இந்தக் குழந்தையின் தந்தை ரமேஷ் பலியான நிலையில், அவரது தாய் ராதா, பாட்டியின் நிலை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் இதுவரை திரும்பாத நிலையில் உடலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இமாச்சல மாநிலத்தின் முதல்வர் சுக்-ஆஷ்ரய் யோஜனா திட்டத்தின் கீழ், நீதிகா, மாநிலத்தின் குழந்தையாக அறிவிக்கப்பட்டார்.

இந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பது, கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது மாநிலத்தின் கடமை என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கூட்ட நெரிசல்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு காவல் ஆணையருக்கு மீண்டும் பணி! கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக கர்நாடக அரசு திங்கள்கிழமை(ஜூலை 28) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சாம்பியன் ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகக் கூறவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட கால இ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை - ஜெய்சங்கர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு... மேலும் பார்க்க

‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது! -உயர் நீதிமன்றம்

ராய்பூர் : ‘ஐ லவ் யூ’ சொல்வதெல்லாம் பாலியல் குற்றமாகாது என்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போக்சோ வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட இளம் பெண் ஒருவரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன காரணத... மேலும் பார்க்க

அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்கும்! அமித் ஷா

அடுத்த 20 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் இருக்கும் என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடைபெற்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் அமித் ஷா நாளை பேசுகிறார்! பிரதமர் மோடி?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(செவ்வாய்க்கிழமை) மக்களவையில் பேசுகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்... மேலும் பார்க்க