செய்திகள் :

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

post image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் நாடு தழுவிய மக்கள் போராட்டம் அவரது கட்சியான தெஹிரிக் - இ - இன்சாஃப் சார்பில் இன்று (ஆக.5) நடத்தப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் தேசிய அளவில் நடைபெற்ற போராட்டம் மற்றும் பேரணிகளில் ஈடுபட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் பஞ்சாப் மாகாணத்தின் லாஹூர் நகரத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டமானது இன்று (ஆக.5) இரவு வரை நடைபெறும் எனவும் இம்ரான் கானின் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தை, பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளார்கள் அங்கு குண்டுக்கட்டாக அதிகளவில் கைது செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், அம்மாகாணத்தில் தெஹிரிக் - இ - இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர்களைக் குறிவைத்து அரசுப் படைகள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இத்துடன், இம்ரான் கான் அடைக்கப்பட்டிருக்கும் அடியாலா சிறையை நோக்கி பேரணி நடைபெற்று அங்கும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இம்ரான் கானின் விடுதலைக்காகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடியாலா சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

More than 500 people have been arrested in a massive protest and rally held by supporters of former Pakistani Prime Minister Imran Khan demanding his release.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

இந்தியா மீது அடுத்த 24 மணிநேரத்திற்குள் கணிசமாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு சிறந்த வணிக பங்குதாரர் அல்ல என்றும், இந்தியாவுடன் மிகச்சிறிய அளவே வண... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாகிஸ்தானில் இடைவிடாத பெய்த பருவமழையால் இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர், 727 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ.13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

அமெரிக்காவில் விசா காலம் முடிந்தும், வெளிநாட்டினர் அதிக காலம் தங்குவதைத் தடுக்கும் வகையில், விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொ... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரி... மேலும் பார்க்க