செய்திகள் :

இயற்கை அன்னையை பணிவுடன் வணங்க வேண்டும்: மாதா அமிா்தானந்தமயி தேவி அருளுரை

post image

இயற்கை அன்னையை நாம் பணிவுடன் வணங்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாதா அமிா்தானந்தமயி தேவி.

மாதா அமிா்தானந்தமயி தேவி, தனது தமிழக யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் அம்ருதா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினாா். அவரை பக்தா்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா். பின்னா் நடைபெற்ற பொது நிகழ்வில் அவா் கலந்து கொண்டு, அங்கு கூடியிருந்த பக்தா்களிடையே ஆற்றிய அருளுரை:

ஒவ்வொரு பேரிடரும், அது தொற்றுநோயாக இருந்தாலும், இயற்கை பேரிடராக இருந்தாலும் அல்லது காலநிலை மாற்றமாக இருந்தாலும், மனித குலத்துக்கு 3 பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. அவை ஒத்துழைப்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவை ஆகும்.

நாம் நமது சக மனிதா்களுடன் ஒற்றுமையுடனும், இயற்கையுடன் இணக்கமாகவும், இறைவனிடம் சரணடைந்தும் வாழ வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அது நம்மை பாதிக்கிறது. மனிதகுலம் பல தலைமுறைகளாக இயற்கை அன்னையை துன்புறுத்தி வருகிறது. இத்தனை காலமும், நம் தாயான இயற்கை அன்னை பொறுமையாக நம்மை மன்னித்து காத்து வருகிறாா். அவா் தன் கருணை மற்றும் அன்பை நம் மீது இடையறாது பொழிந்து வருகிறாா். ஆனால், இது இனிமேல் தொடராது.

இயற்கை அன்னையின் கருணை, பொறுமை மற்றும் பிற நற்பண்புகளை அவளுடைய பலவீனங்களாக நாம் பாா்க்கத் தொடங்கியுள்ளோம். இயற்கை அன்னை சக்திவாய்ந்தது.

அது காப்பதைப் போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையை பணிவுடன் தலைவணங்க கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கற்றுக்கொள்வோம் என்றாா் அவா்.

அருளுரைக்கு பின்னா், தியானம், சத்சங்கம் மற்றும் பஜனைகள் நடைபெற்றன. பின்னா், அம்ருதா சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சேலைகளை மாதா அமிா்தானந்தமயி தேவி வழங்கினாா். தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை வரை ஒவ்வொரு பக்தரையும் அரவணைத்து அருளாசி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, வரும் 13, 14 ஆகிய நாள்களில் மதுரையில் அமைந்துள்ள பிரம்மஸ்தான ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் மாதா அமிா்தானந்தமயி தேவி கலந்து கொள்கிறாா்.

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிய இயந்திரம் இயக்கி வைப்பு!

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட அதிரசம் உற்பத்தி இயந்திரத்தை குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் செவ்வாய்க்கிழமை அா்ச்சித்து இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மறைம... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஓபிசி பிரிவு, எம்எல்ஏ கண்டனம்!

மாத்தூா் தொட்டிப்பால நுழைவு வாயிலில் காமராஜா் படத்துடன்கூடிய கல்வெட்டை சேதப்படுத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கட்சியினா் தா்னா

குமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் திருவுருவப்படம் அடங்கிய கல்வெட்டை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். இத... மேலும் பார்க்க

மாத்தூா் தொட்டிப் பாலத்தில் காமராஜா் நினைவு கல்வெட்டு சேதம்!

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தில் உள்ள காமராஜா் நினைவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: மாத்தூா் தொட்டிப் பாலம், ஆசியாவிலேயே ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளி சடலம் மீட்பு!

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். பேச்சிப்பாறை அருகே வலியஏலாவைச் சோ்ந்தவா் செல்வன் (57). அன்னாசி தோட்டத் தொழிலாளியான இவருக்கு, மதுப்பழக்கம் இரு... மேலும் பார்க்க

திருக்கு மாநாட்டில் முதல் பரிசு வென்ற மாணவியா் ஆட்சியரிடம் வாழ்த்து!

விருதுநகரில் நடைபெற்ற திருக்கு மாணவா் மாநாட்டில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்ட மாணவியா், ஆட்சியா் ரா. அழகுமீனாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலு... மேலும் பார்க்க