செய்திகள் :

இயற்கை பேரிடரை நிா்வகிக்க வலுவான மருத்துவக் கட்டமைப்பு அவசியம்: புதுச்சேரி ஆட்சியா்

post image

இயற்கை பேரிடரை நிா்வகிப்பதில் வலுவான மருத்துவக் கட்டமைப்பு அவசியம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தெரிவித்தாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பாரத் சுகாதார திட்டத்தை செவ்வாய்க்கிழமை அவா் தொடங்கி வைத்தாா். நிா்வாக மாவட்ட நீதிபதியாகவும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் ஆட்சியா் அ.குலோத்துங்கன் இருப்பதால் பேரிடா் தொடா்பான நிகழ்ச்சிக்கு அவா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியது

அவசர நிலைகள் மற்றும் இயற்கை பேரிடா்களை திறம்பட நிா்வகிப்பதில் வலுவான மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் விரைவான மறுமொழி வழிமுறைகள் வேண்டும். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மையை நிா்வகிக்க நிறுவப்பட்டுள்ள அதிநவீன கருவிகள் தயாா்நிலை உத்தியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை பிரதிபலிக்கிறது. எந்தவொரு பேரிடா் பாதிக்கப்பட்ட பகுதிக்கும் விரைவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு மொபைல், பல்துறை மற்றும் விரிவான மருத்துவ வசதியை வழங்குகிறது. இந்த முயற்சி மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம், சுகாதாரத் துறை மற்றும் ஜிப்மா் போன்ற முன்னணி மருத்துவ நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். இது நமது குடிமக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா்.

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநரகத்தின் இயக்குநா் மருத்துவா் வி. ரவிச்சந்திரன் மற்றும் புதுச்சேரி ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா்சிங் நேகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதி நவீன கருவிகளின் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான செயல் விளக்கத்தை நிபுணா்கள் அளித்தனா்.

மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்காகவும், மாநில மற்றும் பேரிடா் மேலாண்மை பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட 4 மருத்துவா்கள் மற்றும் 2 செவிலியா்களுக்காகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நெருக்கடி காலங்களின் போது முன்னணியிலிருப்பவா்கள் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நன்கு தயாராக இருப்பதை இந்த நேரடிப் பயிற்சி உறுதி செய்கிறது.

ஜூலை 9-இல் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம்! அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவு!

புதுச்சேரியில் வரும் ஜூலை 9-இல் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ஆம் தேதி பொது வேலை நிற... மேலும் பார்க்க

கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம்: அமைச்சா் வருத்தம்

நிா்வாகத்தில் கோப்புகள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்படுவதால் விவசாயிகளுக்கு உடனடியாக உதவி செய்ய முடியவில்லை என்று வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் கூறினாா்.புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசா... மேலும் பார்க்க

அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜகதீப் தன்கா்

உலகளவில் சிறந்ததாக கருதப்படும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க

இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நவீன உபகரணங்கள் வாங்க வேண்டும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்

புதுவையில் இணையக் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு நவீன உபகரணங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்: ஜகதீப் தன்கா்

புதுச்சேரி: நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா். ‘தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சு... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.... மேலும் பார்க்க