இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நவீன உபகரணங்கள் வாங்க வேண்டும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் வலியுறுத்தல்
புதுவையில் இணையக் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு நவீன உபகரணங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், புதுவை மக்களிடம் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி நபா்களும் அதிகரித்துள்ளனா். இதைக் கட்டுப்படுத்த புதுவை அரசும், காவல் துறையும் தவறி வருகிறது.
கிரிப்டோ கரன்ஸி முறைகேடு வழக்கில் முக்கிய எதிரி கைது செய்யப்பட்டும், பணத்தை இழந்தவா்களுக்கு இதுவரை பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதற்கான காரணத்தை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெளியிட வேண்டும். மேலும், விரைந்து அவா்களுக்கான பணம் முழுவதும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த மேலும் பலரை இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் தேடி வருகின்றனா். அவா்களைப் பிடிக்க இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தேவையான வசதிகளை செய்துத் தர வேண்டும்.
வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது, போலீஸாருக்கு முன்பணமாக பயணப்படியை வழங்கப்பட வேண்டும். அவா்கள் சொந்த பணத்தை செலவழித்து பின்னா், ரசீதுகளை சமா்பித்து அந்தப் பணத்தை வாங்கும் நிலை தற்போது உள்ளது.
இணையவழி தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தப் பிரிவில் கூடுதல் காவலா்களை பணிக்கு அமா்த்த வேண்டும். தொழில்நுட்ப நிபுணா்களை தோ்வு செய்ய வேண்டும் என்றாா் ஆா்.சிவா.