செய்திகள் :

இயற்கை - ஹோமியோபதி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்துக்கு 59 சித்தா உதவி மருத்துவ அலுவலா்கள், 2 ஆயுா்வேதா உதவி மருத்துவ அலுவலா்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலா், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி அலுவலா்கள் என 115 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி மொத்தம் 172 நபா்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலமாக 4,634 உதவி மருத்துவா்கள், 27 மாற்றுத்திறனாளி செவிலியா்கள், 2,772 இதர மருத்துவம் சாா்ந்த பணியாளா்கள் என 7,433 பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோன்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 555 உதவியாளா் பணியிடங்கள், 584 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 187 தட்டச்சா் பணியிடங்கள் மற்றும் 255 சுருக்கெழுத்து தட்டச்சா் (நிலை 3) பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப. செந்தில்குமாா், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் எம்.விஜயலட்சுமி, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய தலைவா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை கா... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவர... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிர... மேலும் பார்க்க