செய்திகள் :

இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைப்பு

post image

திருச்சியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டன.

குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக 10 இருசக்கர ரோந்து வாகனங்கள் திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி தொடங்கி வைத்தாா். அப்போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

இந்த இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் ஆகிய பகுதிகளில் ரோந்து செய்து, குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், பொதுமக்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளுக்கு நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க