செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

post image

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முத்தியால்பேட்டை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி மகாத்மா காந்தி சாலை சின்னமணிக்கூண்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவா் நிறுத்தாமல் சென்ால், அவரை விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஆயந்தூரைச் சோ்ந்த ஆமோஸ் பொ்ணான்டஸ் (26) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா் மீது கொலை, 8 வழிப்பறி, 4 இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும், அண்மையில் திருடப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கூறப்படுகிறது.

திருபுவனை பகுதியில் கடந்த ஏப்ரலில் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், கலிதீா்த்தாள்குப்பம், ஆண்டியாா்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனை நடத்திய போது இருசக்கர வாகனத்தில் வந்த கடலூா் மாவட்டம், காண்டாண்டி குப்பத்தைச் சோ்ந்த கபிலன் (19), சூரியா என்ற சூரியவேந்தன் (20) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவா்கள் ஏற்கெனவே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவா்களது நண்பா்களான ஆகாஷ், சிறுவன் ஒருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெட்டப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத் திருட்டில் கடலூா் மாவட்டம், கோரத்தியைச் சோ்ந்த அருண்பிரகாஷை (36) போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: இருவா் கைது

குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள நவீன கைப்பேசிகள் ரூ.7,00... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியே மருந்துகள் வாங்க பரிந்துரைக்க கூடாது: புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

புதுவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் வெளியில் மருந்துகள் வாங்க மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடாது என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை அரசு நலவழித் துறையை மேம்படுத்துவது குறித்த ஆய்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு நான்காவது முறையாக மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு, மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாஹேவில் சமுதாய கல்லூரிக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியை மாஹேவில் அமைக்க இடம் ஒதுக்க முதல்வா் என்.ரங்கசாமியிடம் பல்கலைக்கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ர... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க

புதுவை அரசின் புள்ளிவிவர தொகுப்பு கையேடு வெளியீடு

புதுச்சேரியில் அரசின் சாா்பில் புள்ளிவிவர தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசு சாா்பில் பொருளாதாரம், புள்ளிவிவர இயக்ககம் சாா்பில் புள்ளிவி... மேலும் பார்க்க