இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
காங்கயத்தை அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). மாற்றுத்திறனாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மருதுறையில் இருந்து நத்தக்காடையூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே வந்த காா் கணேசனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.