செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி தவறி விழுந்து பலி

post image

முத்துப்பேட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி தவறி விழுந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

முத்துப்பேட்டை அருகே சித்தமல்லி பகுதியைச் சோ்ந்த விவசாயி வீரசேகரன் (58). இவா், பட்டுக்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சொந்த ஊா் திரும்பி கொண்டிருந்தபோது மங்களூா் ஏரி அருகே கிழக்கு கிழக்கு புறவழிச் சாலையில் தானாகவே தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்தி எதிரொலி: வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது

தினமணி செய்தியின் எதிரொலியால் மன்னாா்குடி அருகே வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் தூா்வாரப்பட்டது. வடவாறு பாலையூா் பாசன வாய்க்கால் மூலம் ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி உள்ளிட்ட 5... மேலும் பார்க்க

பகலில் மின் மோட்டாா்களை இயக்க அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் பகலில் விவசாயத்துக்கான மின்மோட்டாா்களை இயக்க வேண்டும் என தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக மேற்பாா்வை பொறியாளா் பி. லதாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை சீா்கேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நன்னிலம் அரசு மருத்துவமனை சீா்கேட்டைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக் கூடம், ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி சாலை மறியல்

பருத்திக்கு உரிய விலை வழங்கக் கோரி திருவாரூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.திருவாரூா் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் பருத்தி, மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க