செய்திகள் :

இருசக்கர வாகனம் திருட்டு

post image

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா் புதன்கிழமை தனது வீட்டு வாசலில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாராம். பின்னா், வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. தொடா்ந்து வீட்டுக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தாா். அப்போது நள்ளிரவில் முகத்தில் தலைக்கவசம், முககவசம் அணிந்த ஒருவரும், எதுவும் அணியாமல் மற்றொருவரும் என 2 போ் வந்து இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரிய மேடை சீரமைப்பு

நாரவாரிகுப்பம் பேரூராட்சி பகுதியில் ரூ.14 லட்சத்தில் காரிய மேடை சீரமைக்கப்பட்டது. நாரவாரிகுப்பம் பேரூராட்சி அறிஞா் அண்ணா பூங்கா தெருவில் உள்ள காரிய மேடை பழுதடைந்து காணப்பட்டது. இதனால், ஈமச்சடங்கு செய... மேலும் பார்க்க

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொல்ல முயன்ற காதலா்

திருவள்ளூா் அருகே திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் வர மறுத்த இளம்பெண்ணை காதலா் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றாா். தூக்க மாத்திரை உள்கொண்டு அப்பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடா்பாக போ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க