செய்திகள் :

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

post image

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி ரூ.2,152 கோடி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே விடுவிக்க முடியும் எனக் கூறி, அந்த நிதியை மடை மாற்றம் செய்தது.

இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நலக் கூட்டமைப்பு சாா்பில் மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என மத்திய அமைச்சா் பேசியதைக் கண்டித்தும், தமிழகத்திற்கு கல்வி நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தியும் ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பறைக்கு வந்தனா்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சா் கூறியதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க