செய்திகள் :

இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

post image

கொல்கத்தா: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் சமையல் எண்ணெய் விலை கிட்டத்தட்ட 17 சதவிகிதம் உயர்ந்த நிலையில், தற்போது விலைகள் இறுதியாக குளிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது மேலும் ஒற்றை இலக்காகக் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் இமாமி அக்ரோடெக் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதாகர் ராவ் தேசாய்.

இந்த விலை குறைவு சுமார் பதினைந்து நாட்களில் சில்லறை விலைகளில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மொத்த சந்தையில் ஏற்கனவே விலைகள் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் தென்பட்டுள்ளன என்றார் கிழக்கு இந்தியாவின் முன்னணி பிராண்டட் சமையல் எண்ணெய் உற்பத்தியாளரின் நிர்வாகி.

கொள்கை மாற்றம் இந்தியாவின் சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலுக்கு புதிய உயிர் அளிக்கும் வகையில், இறக்குமதியைச் சார்ந்து இல்லாத கடுகு எண்ணெயும், ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக 34 சதவிகிதம் குறையக்கூடும் என்றார் தேசாய்.

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 12.5 சதவிகிதத்திலிருந்து 22.5 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரிப்பதை கணிசமாக செலவு குறைந்ததாக மாற்றியுள்ளது. அதே வேளையில் 10 சதவிகித வரி குறைப்பு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் ஹால்டர் வென்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேஷப் குமார்.

சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகள் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக சுதா்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளாா். வரும் ஆக. 25 முதல் இந்த ந... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் 4-ஆவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்த... மேலும் பார்க்க

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க