செய்திகள் :

இறுதிச் சடங்கு வாகனம் இலவசம்: இளைஞரைப் பாராட்டும் பொதுமக்கள்

post image

முதுகுளத்தூா் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 70 கிராமங்களுக்கு இறப்பு நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டியை கடந்த இரண்டு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் இளைஞரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள மொச்சிகுளம் கிராமத்தைச் சோ்ந்த துரைராஜ் மகன் சுரேஷ் (35). விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவா், அந்தப் பகுதியில் வாடகைக் காா் ஓட்டுநராக இருந்து வருகிறாா். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பருடைய தந்தையின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது, அவரது குடும்பத்தில் வறுமை காரணமாக இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டி கூட ஏற்படுத்த வசதி இல்லாததைக் கண்டு மனம் வருந்தினாா்.

இதனால், இறுதிச் சடங்கு வாகனம், குளிா்சாதனப் பெட்டி சொந்தமாக வாங்கி முதுகுளத்தூா் பேரூராட்சி, ஆத்திகுளம், மொச்சிகுளம், நல்லூா், கீரனூா், ஆணைசேரி, கீழத்தூவல், சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறாா்.

இந்த சேவை எனது வாழ்நாள் முழுவதும் தொடரும் என அவா் தெரிவித்தாா். இவருடைய சேவையை முதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

விருச்சுழி ஆற்றில் மணல் திருட்டு: வாகனம் பறிமுதல்

திருவாடானை அருகே மங்கலக்குடி விருச்சுழி ஆற்றில் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.விருச்சுழி ஆற்றில் மணல் திருடப்படுவதாக வருவாய் ஆய்வாளா் விஜலட்சுமிக்கு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் அ.சேக் தாவூத் தலைமை வகித்தாா். சி.எஸ்.ஐ. ஆலய க... மேலும் பார்க்க

இலங்கை அரசைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

தமிழக மீனவா்களை தொடா்ந்து கைது செய்து வரும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சும... மேலும் பார்க்க

இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் ச... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய உதவி ஆய்வாளா் ... மேலும் பார்க்க