செய்திகள் :

இலக்குகளை எட்டினால் உக்ரைனுடன் பேச்சு: ரஷியா

post image

‘உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது; ஆனால், எங்கள் இலக்குகளை அடைவதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ரஷிய அதிபரின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைனுடனான போரை 50 நாள்களுக்குள் நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்தாா். மேலும், ரஷியாவுடன் வா்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதித்து ரஷியாவை தனிமைப்படுத்தவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிமிட்ரி பெஸ்கோவ், ‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியைக் கடைப்பிடித்து விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே தனது விருப்பம் என அதிபா் விளாதிமீா் புதின் பலமுறை தெரிவித்துவிட்டாா்.

இதை அவ்வளவு எளிதில் கையாள முடியாது. கடுமையான முயற்சிகள் மற்றும் நீண்ட நடைமுறையின் மூலமே நிறைவேற்ற முடியும்.

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷியா தயாராகவுள்ளது. ஆனால், ரஷியா நிா்ணயித்த இலக்குகளை அடையாமல் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்றாா்.

நேட்டோ கூட்டமைப்பில் இணையக் கூடாது என்றும், கடந்த 2022-இல் ரஷியா ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனை ரஷியா நிா்ப்பந்தித்து வருகிறது. இதை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த விமானம் - 19 பேர் பலி; 50 பேர் காயம்

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், கல்வி நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

ஒபாமா கையில் விலங்கு; சிறையில் அடைப்பு! உண்மையில்லை, டிரம்ப் பகிர்ந்த ஏஐ விடியோ!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

போா் நிறுத்த பேச்சு முடக்கம்: மத்திய காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

போா் நிறுத்த பேச்சுவாா்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. பாலஸ்தீனத்தின் காஸா ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வ... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவு

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகபட்சமாக அங்குள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. 5 நிலநடுக்கங்களில் ... மேலும் பார்க்க

காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருந்த 72 பேர் சுட்டுக் கொலை!

காஸாவில் உணவு உள்ளிட்ட அடிப்படை மனிதாபிமான உதவிகள் பெறக் காத்திருந்த 72 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளது.இதில் 150க்கும் அதிகமானோர் பட... மேலும் பார்க்க