இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில் சிலைமான் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதிலிருந்த இளைஞா்கள் இருவா் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் ராமேசுவரம் பாம்பன் பகுதியைச் சோ்ந்த நேசகுமாா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த ஜான் பெனட்ரிக் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரை, ராமேசுவரம் வழியாக 160 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 160 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.