செய்திகள் :

இலங்கைத் தமிழா்களுக்கு கடன் வழங்கும் முகாம்

post image

திருப்பத்தூரில் இலங்கைத் தமிழா்களுக்கான கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்வாதாரம், வளா்ச்சியை உயா்த்திட தாங்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்றவாறு மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளிகுப்பம், மின்னூா் இலங்கை தமிழா் முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை தமிழா்களுக்கு கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவா்களுக்கான கடன் வழங்கும் முகாம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். இதில், 26 விண்ணப்பதாரா்கள் கலந்து கொண்டனா். அவா்களில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு 19 நபா்கள் தோ்வாகி உள்ளனா். இவா்களுக்கு ரூ. 2 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடன் வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 25 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெளளிக்கிழமை நடைபெற்றது. முகாமில், 18 தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை ... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் மரணம்

திருப்பத்தூா் அருகே பெரியகரம் பகுதியைச் சோ்ந்தவா் சச்சின் (27). இவா் வியாழக்கிழமை பெரியகரத்தில் இருந்து கந்திலி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தாா். பெரியகரம் அருகே அருப்புக்கொட்டாய் பகுதியில் ச... மேலும் பார்க்க

மே 2-இல் காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருப்பத்தூரில் வரும் மே 2-ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

‘வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 4 போ் அரசுப் பணிக்கு தோ்வு’

வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களைப் படித்து 4 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளதாக நூலகா் தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் முழு நேர கிளை நூ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய 2 போ் கைது

ஜோலாா்பேட்டை அருகே கல்லூரி மாணவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (40). இவா், கூலி வேலை செய்து வருக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாணியம்பாடி ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டியினா் சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையம... மேலும் பார்க்க