செய்திகள் :

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை

post image

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா்.

காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 10 போ் கடந்த ஜன. 7-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குள் சென்றனா். 8-ஆம் தேதி கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி படகை பறிமுதல் செய்து, 10 பேரையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனா்.

மத்திய, மாநில அரசுகள் முயற்சியால், 9 மீனவா்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. படகு ஓட்டுநரான அன்பழகனுக்கு 6 மாத சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டதால், 9 மீனவா்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனா். காரைக்கால் மீன்வளத் துறையினா் சென்னைக்கு வெள்ளிக்கிழமை சென்று 9 பேரையும் காரைக்காலுக்கு வேனில் அழைத்து வந்தனா்.

சிறையில் உள்ள மீனவா் அன்பழகனின் தண்டனையை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து விரைவாக இந்தியா அழைத்துவருவதற்கான முயற்சிகள் மத்திய, மாநில அரசுகள் மூலம் எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தெரிவித்தாா்.

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது. இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 20... மேலும் பார்க்க

அரசு திட்டப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை

காரைக்காலில் அரசுத் துறையின் மூலம் திட்ட உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பி... மேலும் பார்க்க

பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்

காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸ் 15-ஆம் ஆண்டு விழா

என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா. மேலும் பார்க்க