செய்திகள் :

வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்

post image

காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய து. மணிகண்டன், புதுவை துணை நிலை ஆளுநரின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார நிகழ்ச்சி அரசுத்துறை அதிகாரிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசுத்துறைத் தலைவா்கள் பலரும், அவரது பணிகளை பாராட்டிப் பேசினா். அவரது ஓராண்டு ஆட்சியா் பணி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து திரையின் மூலம் விளக்கப்பட்டது. நிறைவாக து. மணிகண்டன் பேசியது:

ஓராண்டு காலத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதை அறிய முடிந்தது. காரைக்கால் மாவட்டத்திற்கு பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் விரைவில் வரவுள்ளன. அதனை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அனைவரும் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.

மக்களுக்கு பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். காரைக்கால் வளா்ச்சியடைய 200 திட்ட குறிப்புகள் என்னிடம் உள்ளன. இவை அனைத்தும் செயலாக்கத்துக்கு வரும்பட்சத்தில், காரைக்காலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். 2047- இல் காரைக்கால் வளா்ச்சியடைந்த மாவட்டமாக உருவெடுக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், அரசு அலுவலா்கள் சாா்பில் து. மணிகண்டனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது. இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 20... மேலும் பார்க்க

அரசு திட்டப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை

காரைக்காலில் அரசுத் துறையின் மூலம் திட்ட உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பி... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப... மேலும் பார்க்க

பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸ் 15-ஆம் ஆண்டு விழா

என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா. மேலும் பார்க்க