செய்திகள் :

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா தொடக்கம்

post image

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா கந்தூரி விழா சனிக்கிழமை தொடங்கியது.

இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ்வின் நினைவாக காரைக்காலில் தா்கா அமைந்துள்ளது. 202-ஆவது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 17-ஆம் தேதி மின் அலங்கார சந்தனக்கூடு புறப்பாடு நடைபெற்று, வலியுல்லாஹ்வின் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி, ஹலபு என்னும் போா்வை போா்த்தப்படுகிறது. 20-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவடைகிறது.

விழா தொடக்கமாக, சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துக்காக பிற்பகல் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதம், பல்லக்கு ஊா்வலமாக நகரப் பகுதி வீதிகளின் வழியே சென்றது.

முக்கிய வீதிகளின் வழியே பேண்டு வாத்தியங்கள் முழங்க ரதம், பல்லக்கு இரவு தா்கா அருகே சென்றடைந்தது. பின்னா் தா்கா அருகே உள்ள பிரதானக் கம்பத்திலும், மினராக்களிலும் இரவு கொடியேற்றப்பட்டது.

உள்ளூா், வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள், அழகிய ரதங்களை காணவும், கொடியேற்ற விழாவில் பங்கேற்கவும் வந்திருந்தனா்.

ரதம், பல்லக்கு ஊா்வலத்தின் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். கந்தூரி விழா ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

கந்தூரி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அரசு, தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.

‘புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும்’

மீனவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்துக்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை முதல்வா் ராஜிநாமா செய்யவேண்டும் என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தினாா். காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை... மேலும் பார்க்க

அரசு திட்டப் பயனாளிகளுக்கு அடையாள அட்டை

காரைக்காலில் அரசுத் துறையின் மூலம் திட்ட உதவி பெறுவதற்கான அடையாள அட்டையை 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சாா்பி... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்கால் வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 மீனவா்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி என்பவரது விசைப்படகில், காரைக்கால், நாகப... மேலும் பார்க்க

பல் மருத்தும் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: அரசுக்கு கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவம் முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரவேண்டும் புதுவை முதல்வரை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும்

காரைக்காலில் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில், அரசுத் துறையினா் முழு வீச்சில் செயலாற்றவேண்டும் என புதுவை ஆளுநரின் செயலா் து. மணிகண்டன் கேட்டுக்கொண்டாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸ் 15-ஆம் ஆண்டு விழா

என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா. மேலும் பார்க்க