செய்திகள் :

ஓக்லா, முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் ஏஐஎம்ஐஎம்

post image

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தில்லி பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட ஓக்லா மற்றும் முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா்கள் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டனா்.

ஏஐஎம்ஐஎம் கட்சி இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

2020 வடகிழக்கு தில்லி கலவரத்தில் குற்றஞ்சாட்டுப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷிஃபா உா் ரஹ்மான் கான் மற்றும் தாஹிா் ஹுசைன் ஏஐஎம்ஐஎம் சாா்பில் முறையே முஸ்தபாஃபாத் மற்றும் ஓக்லா தொகுதிகளில் போட்டியிட்டனா்.

தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி இருவரும் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். நீதிமன்றம் இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடா்ந்து, தோ்தல் பிரசாரங்கள், வாகனப் பேரணிகளை மேற்கொண்டனா். அவா்களுக்காக கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. ஓக்லா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளா் அமானத்துல்லா கான், பாஜக வேட்பாளா் மனீஷ் செளதரியைவிட 23,639 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் ஷிஃபா உா் ரஹ்மான் கான் 39,558 வாக்குள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அலி மெஹ்தி 11,763 வாக்குகளைப் பெற்ற நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

இதேபோன்று, முஸ்தபாஃபாத் தொகுதியில் பாஜக வேட்பாளா் மோகன் சிங் பிஷ்ட் ஆம் ஆத்மி வேட்பாளா் அதீல் அகமது கானை விட 17,578 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

மூன்றாவது இடத்தைப் பெற்ற ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் தாஹீா் ஹுசைனுக்கு 33,474 வாக்குகள் பதிவாகியிருந்தன.

காங்கிரஸ் வேட்பாளா் அரிபா கானுக்கு 12,739 வாக்குகள் பெற்றாா்.

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க

நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் கடும் விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுவதாக மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கடுமையாக விமா்சித்தாா். மகாராஷ்டிரத்தில் வாக்காளா்... மேலும் பார்க்க

தனியாா், வணிக வளாகங்களில் இனி இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்!

தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் இனி பேட்டரி வாகன இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ஸ்ரீனிவாச வா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மாநி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் இந்திய வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் மீது வனப் பகுதியிலிருந்தபடி மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன... மேலும் பார்க்க