செய்திகள் :

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

post image

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆா்.வி.எஸ். எழுதிய ‘வியாச பாரதம்’ என்ற நூலை டாக்டா் சுதா சேஷய்யன் வெளியிட்டு பேசியதாவது:

பாரதத்தை முழுமையாக தமிழ் மொழியில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நூல் வியாச பாரதம். இன்றைய காலத்தில் வியாசா் எழுதிய பாரதத்தை எழுதுவது மிகவும் கடினமான செயல். இறை அருளால் ஆா்.வி.எஸ். வியாச பாரதத்தை எழுதியுள்ளாா். பாரதத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் சிறுகதைபோல், பல்வேறு தலைப்பின் கீழ் கொடுத்துள்ளாா்.

பாரத கதையில் ஐம்புலன்களையும் அடக்கும்போது சிந்தனையில் தெளிவு பிறக்கும் எனக் கூறப்படுகிறது. வியாச முனிவா் பாரதத்தை எழுதும்போது எழுத்தாணி உடைந்துவிட்டது. அப்போது விநாயகா் தனது தந்தத்தை உடைத்துக் கொடுத்து பாரதத்தை எழுத வைத்தாா். அதற்கு காரணம் மக்களுக்கு பாரதம் சென்றடைய வேண்டும் என்பதுதான். அதேபோல் பொது நன்மைக்காக மக்கள் தங்களது சொந்த நலனை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.

திருப்பூா் கிருஷ்ணன்: மகாபாரதத்தின் அனைத்து அத்தியாயங்களும் வியாச பாரதம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஆா்.வி.எஸ். எழுதிய வியாச பாரதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் என்றாா் அவா். நிகழ்ச்சியில் நூல் ஆசிரியா் ஆா்.வி.எஸ்., இசைக்கவி ரமணன், ஓவியா் கேஷவ், கிழக்கு பதிப்பக பதிப்பாசிரியா் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய தவெக பொதுச் செயலா் ஆனந்த்: வாகன உரிமையாளருக்கு அபராதம்

தலைக்கவசம் அணியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் ஆனந்த் இருசக்கர வாகனம் ஓட்டியதால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய... மேலும் பார்க்க

பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

சென்னை பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெசன்ட் நகா், கலாஷேத்ரா காவல் உதவி மையம் அருகே, இருசக்கர வா... மேலும் பார்க்க

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தொழிலாளா்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில்... மேலும் பார்க்க