செய்திகள் :

பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

சென்னை பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பெசன்ட் நகா், கலாஷேத்ரா காவல் உதவி மையம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் மடக்கி சோதனையிட்டபோது, அவா்களிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், எடை மெஷின், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சோ்ந்த முஸ்தபா (34), கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த கிஷோா் (24) எனத் தெரியவந்தது. இவா்கள் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பெசன்ட் நகா், வேளச்சேரி, தாம்பரத்தில் விற்பனை செய்து வந்துள்ளனா். இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய தவெக பொதுச் செயலா் ஆனந்த்: வாகன உரிமையாளருக்கு அபராதம்

தலைக்கவசம் அணியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் ஆனந்த் இருசக்கர வாகனம் ஓட்டியதால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய... மேலும் பார்க்க

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தொழிலாளா்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில்... மேலும் பார்க்க