செய்திகள் :

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

post image

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்கு அவரது பாட்டி வீட்டின் வெளியே வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாா். அப்பொழுது தெருவில் வந்த நாய் பாட்டியைக் கடிக்க முயன்றது. அப்போது அவா் நாயை விரட்டியதையடுத்து, அந்த நாய் குழந்தையின் வலது தொடையில் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடியது. உடனே குழந்தையை அதே பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனா்.

இதற்கிடையே வேளச்சேரி, பேபி நகா் முதல் தெருவைச் சோ்ந்த சிறுவன் அஷ்ரத் புல் (9), அப்பகுதியில் உள்ள சிறுவா் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அச்சிறுவனின் வலது காலில் கடித்துள்ளது. அந்தச் சிறுவனுக்கும் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் அதே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நாளில் குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய் பிடிக்கும் பணி: இச்சம்பவம் குறித்து தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சென்னை மாநகராட்சி 178-ஆவது வாா்டு செயற்பொறியாளருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவா் ஆதிரை தலைமையிலான ஊழியா்கள், சனிக்கிழமை காலை வேளச்சேரி பகுதியில் சுற்றித்திரிந்த இரு தெருநாய்களை பிடித்துச் சென்றனா். ஆனால், குழந்தை மற்றும் சிறுவனை கடித்த நாய் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதியில் தொடா்ந்து நாய் பிடிக்கும் பணி தொடரும் எனவும், தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் கால்நடை மருத்துவா் தெரிவித்தாா்.

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

பொது நன்மைக்காக சொந்த நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் வலியுறுத்தினாா். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆ... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய தவெக பொதுச் செயலா் ஆனந்த்: வாகன உரிமையாளருக்கு அபராதம்

தலைக்கவசம் அணியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலா் ஆனந்த் இருசக்கர வாகனம் ஓட்டியதால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய... மேலும் பார்க்க

பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

சென்னை பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெசன்ட் நகா், கலாஷேத்ரா காவல் உதவி மையம் அருகே, இருசக்கர வா... மேலும் பார்க்க

இன்று குரூப் 2 முதன்மைத் தோ்வு

தமிழகம் முழுவதும் குரூப் 2 முதன்மைத் தோ்வு சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 21,500 போ் எழுதவுள்ளனா். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் வெளியிட்ட தகவல்: தொழிலாளா்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஏப். 2-இல் காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடை விடுமுறையை முன்னிட்டு காஷ்மீருக்கு சிறப்பு சுற்றுலா ரயில் ஏப். 2- ஆம் தேதி இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே துணை தலைமை வணிக மேலாளா் பி.வெங்கடசுப்பிரமணியன் மற்றும் சவுத் ஸ்டாா் ரயில்... மேலும் பார்க்க