செய்திகள் :

தில்லி தோ்தல்: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட (போட்டியிடும் வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது அக்கட்சியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் மாா்க்சிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோ்தலில் நோட்டாவுக்கு 0.57 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.01 சதவீத வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.02 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிட்டன.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 0.58 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 0.77 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2013-ஆம் ஆண்டு ‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைப்பவா்கள் 49-ஓ படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது. ‘நோட்டா’ வுக்கு வாக்களிப்பதற்கான பொத்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் இறுதியில் இருக்கும். பெருக்கல் குறியிட்டு அடிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு அதன் சின்னமாகும்.

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க