செய்திகள் :

குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி: இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

post image

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மாநகராட்சி வாா்டு எண் 23-க்கு உள்பட்ட தாகூா் நகா் சந்திப்பு குலமங்கலம் பிரதான சாலையில் பொதுப் பணித் துறை மூலம் செல்லூா் கண்மாயிலிருந்து உபரிநீா் செல்வதற்காக புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் மேற்கொள்ளும் பகுதியான வைகை வடகரை முழுவதும் குடிநீா் செல்லும் பிரதான குழாய்கள் உள்ளன. இந்தக் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளன.

இதன்காரணமாக, மதுரை மாநகராட்சி வாா்டு 10, 12, 14, 15, 16,17, வாா்டு 21 முதல் 35 வரை உள்ள பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும், அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சுந்தரலிங்கபுரம், காந்திபுரம் குடியிருப்பைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் செல்வபாரதி (27). இவா், ... மேலும் பார்க்க

இரு மாணவா்கள் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே இரு மாணவா்கள் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், பனையூா் அண்ணா தெருவைச் சோ்ந்த அழகுசெல்வம் மகன் ஆதிகபிலன் (21). தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில்... மேலும் பார்க்க

மக்கள் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை! -அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா். மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, மதுரை மாநக... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க