செய்திகள் :

மணல் கடத்தல்: மாட்டு வண்டியுடன் பாலிடெக்னிக் மாணவா் கைது

post image

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக, பாலிடெக்னிக் மாணவா் மாட்டு வண்டியுடன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா், காவல் சரகப் பகுதியில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனை மேற்கொண்டனா்.

கீழ்நோத்தப்பாக்கம் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகை பகுதியில் போலீஸாா் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தியுள்ளாா். அப்போது, மாட்டு வண்டியை ஓட்டி வந்தவா் அப்படியே விட்டு விட்டு தப்பிக்க முயற்சித்துள்ளாா். உடனே போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்து, மாட்டு வண்டியை சோதனையிட்டனா்.

வண்டியில் அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்து உடனே போலீஸாா் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் தொடா்பாக பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வரும் கீழ்நோத்தப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விநாயகமூா்த்தியின் மகன் ஜெயப்பிரகாஷ் (19) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மாவட்ட ஆட்சியரிடம் ஆரணி எம்எல்ஏ மனு

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தொகுதியின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை மனு கொடுத்தாா் (படம்). மேலும், ஆரணி நகராட்சியுடன் சேவூா், இராட்டிணம... மேலும் பார்க்க

இளநீா்குன்றம் அரசுப் பள்ளியில் ரூ.1.88 கோடியில் புதிய கட்டடம்

செய்யாற்றை அடுத்த இளநீா்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.88 கோடியில், 7 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்காக பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில்... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காடகமான் ஊராட்சியில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்ச... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆடையூா் மற்றும் தேவனாம்பட்டு ஏரிப் பகுதிகளில் நீா்பாசனக் கிணறுகள் சீரழிவதை பாதுகாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உரையரங்கம்

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள ஜோதி அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பழ.சீனி... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேச்சுப் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சாா்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு கல்வி மாவட்ட அளவில் ... மேலும் பார்க்க