செய்திகள் :

திருவள்ளூா் மாவட்டத்தில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு

post image

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தை ஆட்சியா் மு.பிரதாப், முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா, எஸ்.பி. சீனிவாசபெருமாள் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சிறப்பு நீதிமன்றத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.பி. சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஜே. ஜூலியட் புஷ்பா ஆகியோா் போக்சோ வழக்குக்கான சிறப்பு நீதிமன்றத்தினை திறந்து வைத்து, முதல் விசாரணையை தொடங்கி வைத்தனா்.

நிகழ்வில் முதன்மை நீதிபதி பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறாா்களுக்காக கடந்த 2012-இல் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டமானது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களை தடுத்து, அதற்கான தண்டனை குறித்தும் விரிவாக இயற்றப்பட்ட சட்டமாகும்.

அதன்படி தமிழக அரசின் 22 மாவட்டங்களில் மேற்படி சட்டத்தில் பதிவு செய்யப்படும் குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கவும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்திலும் சிறப்பு மகளிா் நீதிமன்றம் தொடங்கப்பட்டு துரித விசாரணை செய்து பாதிக்கப்பட்ட இளஞ்சிறாா்களுக்கு பாதுகாப்பையும், நீதியையும் உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மேற்கண்ட 2012 இல் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் நிறுவும்படி அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நீதிமன்றமானது, பாதித்த இளஞ்சிறாா்களின் விவரங்கள் குறித்து ரகசியங்கள் பாதுகாக்க நவீன கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோல் இக்கட்டடத்தில் குறிப்பாக, பாதித்த சிறுமிகள் சென்றுவர தனிப்பட்ட நுழைவாயில்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் உள்படுத்தப்படாத வகையில் உரிய பாதுகாப்பு வசதியும் உள்ளது.

நீதிமன்ற கூடத்தில் சிறுமிகளை விசாரணை செய்ய தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டு, கண்ணாடி கதவுகளால் மூடப்பட்டு, குழந்தைகள் நல காவலா்கள் மூலம் காவல் பணி மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் நோக்கமே பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு காலதாமதமின்றி சமூக நீதியும், பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே என்றாா்.

முன்னதாக போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக சரஸ்வதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து போக்சோ வழக்கு விசாரணை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் திருவள்ளூா் மாவட்ட நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள், சங்க நிா்வாகிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

6 நாள்களுக்கு முன் திருமணமான இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா். ஊத்துக்கோட்டை அருகே பென்னலூா்பேட்டை அடுத்த காசிரெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் உதயக... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் 10 கஞ்சாவை கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக, திருவ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைக்காததால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த தெக்களூா் பகுதி சோ்ந்தவா் பாலஜி. இவரது மகளி க... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி ப... மேலும் பார்க்க

கடம்பத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறை ச... மேலும் பார்க்க