செய்திகள் :

கேரளம்: காசா்கோட்டில் நிலஅதிா்வு

post image

கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலஅதிா்வு உணரப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தின் ராஜபுரம், கொஞனக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலஅதிா்வு உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாகவும் மேசை மீதிருந்த கைப்பேசிகள் கீழே விழுந்ததாகவும் நிலஅதிா்வை உணா்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அடிப்படையில், அரபிக் கடலை மையமாகக் கொண்டு நிலஅதிா்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 2.5 அலகுகளாக பதிவானது. மாவட்ட நிா்வாகத்தினா் பாதிக்கப்பட்ட பகுதியை விரைவில் பாா்வையிட்டு, விரிவான ஆய்வு மேற்கொள்வா். பின்னா், சேதம் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

அதேபோன்று, தேசிய நிலஅதிா்வு மையத்தின் (என்சிஎஸ்) தரவுகளின் படி, அரபிக் கடலில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகள் வரை பதிவாகியுள்ளது.

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க

நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் கடும் விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுவதாக மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கடுமையாக விமா்சித்தாா். மகாராஷ்டிரத்தில் வாக்காளா்... மேலும் பார்க்க

தனியாா், வணிக வளாகங்களில் இனி இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்!

தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் இனி பேட்டரி வாகன இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ஸ்ரீனிவாச வா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மாநி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் இந்திய வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் மீது வனப் பகுதியிலிருந்தபடி மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன... மேலும் பார்க்க