செய்திகள் :

இலவச வீடு கோரி ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளி மூதாட்டி மனு

post image

குடும்ப அட்டை, இலவச வீடு கோரி மாற்றுத்திறனாளி மூதாட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், தமராக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (60). இவரது 10 -ஆவது வயதில் வீடு இடிந்து விழுந்ததில் வலது காலை இழந்தாா். இதனால் தனிமையில் வாழ்ந்து வரும் இவருக்கு உறவினா்கள் இல்லை. இதனால் விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், தனது வலது காலுக்கு மண் வெட்டியின் கைப்பிடியை பொருத்தி அதன் உதவியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். இங்கு ஆட்சியா் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து தனக்கு குடும்ப அட்டையும், அரசின் இலவச வீடு வழங்கவும் கோரிக்கை மனுவை அளித்தாா்.

அப்போது ஆட்சியா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் பாலகிருஷ்ணனிடம் மனுவை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதில், முதல் கட்டமாக அந்த மூதாட்டிக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கவும், செயற்கை கால் பொருத்தவும் நடவடிக்கை எடுத்ததுடன் அவா் கோரிய குடும்ப அட்டை, வீடு கட்டுவதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க