செய்திகள் :

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

கிருஷ்ணகிரி: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விவசாய தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டச் செயலாளா் மாது தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் முத்து, வட்டச் செயலாளா் பெரியசாமி, பொருளாளா் செல்வராசு, மாநிலக் குழு உறுப்பினா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வசிக்கும் விவசாய தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா். பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்

படவரி...

கிருஷ்ணகிரியில் இலவச பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா்கள்.

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய இளைஞா்: தேடும் பணி தீவிரம்

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலம், பெங்களூா், ஒங்கசந்திரா பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க