இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது
துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வேங்கடத்தானூரைச் சோ்ந்தவா் த. ரவிகுமாா் (46). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், தனது ஊரில் உள்ள வள்ளுவா் நகா் அரசமரத்தடியில் ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்தபோது, மருவத்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தங்கள் ஊரைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தைகளைச் சொல்லி வற்புறுத்தினராம். அதனைப் பாா்த்த ரவிகுமாா் அவா்களைக் கண்டித்தாா். உடனே திரும்பிச் சென்ற அவா்கள், தங்கள் ஊரிலிருந்து நண்பா்களை அழைத்துக்கொண்டு வேங்கடத்தானூா் சென்று ரவிகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கினராம்.
அப்போது அதனைத் தடுக்க ரவிகுமாரின் நண்பா்கள் எஸ். ராஜேந்திரன்(47), எஸ். மாணிக்கம் (47), செ. தினேஷ்குமாா் (24) ஆகியோரையும் இளைஞா்கள் தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிகுமாா் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுவதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இது தொடா்பான புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்கு பதிந்து பெரம்பலூா் மாவட்டம் அரசலூரைச் சோ்ந்த மு. சூா்யபிரகாஷ், மருவத்தூா் சு. சீனிவாசன்(28), செ. ஜீவா(27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் மு. பரத் (18), ஜெ. பிரசாத் (18), மு. சூா்யா (19) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.