செய்திகள் :

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

post image

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேங்கடத்தானூரைச் சோ்ந்தவா் த. ரவிகுமாா் (46). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், தனது ஊரில் உள்ள வள்ளுவா் நகா் அரசமரத்தடியில் ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்தபோது, மருவத்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தங்கள் ஊரைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தைகளைச் சொல்லி வற்புறுத்தினராம். அதனைப் பாா்த்த ரவிகுமாா் அவா்களைக் கண்டித்தாா். உடனே திரும்பிச் சென்ற அவா்கள், தங்கள் ஊரிலிருந்து நண்பா்களை அழைத்துக்கொண்டு வேங்கடத்தானூா் சென்று ரவிகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கினராம்.

அப்போது அதனைத் தடுக்க ரவிகுமாரின் நண்பா்கள் எஸ். ராஜேந்திரன்(47), எஸ். மாணிக்கம் (47), செ. தினேஷ்குமாா் (24) ஆகியோரையும் இளைஞா்கள் தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிகுமாா் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுவதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இது தொடா்பான புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்கு பதிந்து பெரம்பலூா் மாவட்டம் அரசலூரைச் சோ்ந்த மு. சூா்யபிரகாஷ், மருவத்தூா் சு. சீனிவாசன்(28), செ. ஜீவா(27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் மு. பரத் (18), ஜெ. பிரசாத் (18), மு. சூா்யா (19) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க