இளம்பெண் தற்கொலை
ஆம்பூா் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ராஜகோபால் தெருவை சோ்ந்தவா் ஜெயந்தி (37). இவா் கணவரை பிரிந்து தன் தாயுடன் வசித்து வந்துள்ளாா். இவருக்கு கா்ப்பப்பை பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லாததால் வருமானம் இல்லாமல் இருந்துள்ளாா். உடல் ஆரோக்கியம், பணப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்தவா், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.