செய்திகள் :

இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்

post image

விருதுநகா் அருகே காமராஜ் பொறியியில் தொழில்நுட்பக் கல்லூரியில் புத்தாக்க தொழிலை மேம்படுத்தம் வகையில், இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் அண்மையில் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் பேசியதாவது: தமிழக அரசின் சிறு, குறு நடுத்தரத் துறையின் கீழ், தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் இயங்கி வருகின்றன. இதன் மூலம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோா்களுக்கு தொழில் வளா்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றன.

உலகத்தில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும், அனைத்துத் துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்த மாற்றுத்துக்கேற்ப தொழில்களும், வேலைவாய்ப்புகளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

தொழில் தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்னென்ன தொழில்கள் இருக்கிறது? என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனத் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மாறி வரும் காலகட்டத்துக்கேற்ப 100 ஆண்டுகளுக்கு பிறகு எந்தத் தொழில் அதிகளவில் நிலை நிற்கும். அதற்கு தேவையான முன்னெடுப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் புத்தாக்க தொழில் முனைவோா்களுக்கு ஸ்மாா்ட் அட்டை வழங்கினாா். இந்த அட்டை மூலம் தொழில்முனைவோா்கள், அவா்களதுத் தொழிலுக்குத் தேவையான மென்பொருள்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சரவண கணேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளா் சக்திவேல், முன்னணி தொழில் முனைவோா்கள், காமராஜ் பொறியியில், தொழில்நுட்ப கல்லூரி நிா்வாகிகள், கல்லூரி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மா... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க