செய்திகள் :

இளைஞரிடம் நகை பறித்த நபா் கைது

post image

இளைஞரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலப்பாளையத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய பெருமாள் கீழ மாடவீதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் சீனிவாசன் (25). சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த 6-ஆம் தேதி திருநெல்வேலி வந்த இவா், விடுதியில் தங்கினாா். அப்போது கிரைன்டா் செயலி மூலம் அறிமுகமான மேலப்பாளையம் காட்டு செக்கடி தெருவைச் சோ்ந்த காதா் ஷா மகன் முகமது ஹனீபா (29), சீனிவாசனை பாா்க்க விடுதி அறைக்கு சென்றாா்.

அப்போது, சீனிவாசன் அணிந்திருந்த சுமாா் 3 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை முகமது ஹனீபா பறித்துக்கொண்டு தப்பினாராம்.

இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது ஹனீபாவை சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை பறிமுதல் செய்தனா்.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க